Skip to content
Home » பெரம்பலூரில் சிஸ்டம் மூலம் சீட்டாட்டம் விளையாடிய 6 பேர் கைது…

பெரம்பலூரில் சிஸ்டம் மூலம் சீட்டாட்டம் விளையாடிய 6 பேர் கைது…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் (கேம்லிங்) விளையாடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 05.01.2024 பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கேம்லிங் ஆடுவதாக மாவட்ட எஸ்பிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உடனடியாக தனிப்படையினர் குன்னம் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொள்ள செய்தார் அப்போது ஜெமீன்ஆத்தூர் பகுதியல் உள்ள செல்லியம்மன் கோவில் பின்புறம் சட்டத்திற்கு புறம்பாக டோக்கன் சிஸ்டம் மூலம் சீட்டாட்டம் (கேம்லிங்) விலையாடிக்கொண்டிருந்த 1) மணிமாறன் (28), 2)ராஜா (38) ,  3)ரஞ்சித் (32), 4)அசோக்ராஜ் (40), 5)தமிழரசன் (22)   6)வேல்முருகன் (23)  ஆகியோர்களை கைது செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தனிப்படையினர் குற்றவாளிகளை குன்னம் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து TN 07 BV 2999 (மாருதி சுசிகி) TN 91 X 9831 (மாருதி சுசிகி) TN 25 AH 9394 (சுவிப்ட் டிசைர்) என்ற பதிவெண்கொண்ட மூன்று கார்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 28,470 ரூபாய் பணம் 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சீராளன் வழிகாட்டுதலின்படி குன்னம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் குற்றவாளிகள் 6 பேரையும் அரியலூர் கிளைச்சிறையில் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!