Skip to content
Home » பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம்….

பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம்….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை பிரிவு சாலையில் மாபெரும் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் இலங்கைத் தமிழர்களுக்காக பெரம்பலூரில் 1995- ஆம் ஆண்டு உயிர் நீத்த அப்துல் ரவூப் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு டிசம்பர்- 15 ஆம் தேதியான இன்று நடைபெற்றது. பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் தங்க.இரத்தினவேல் ,மாவட்டத் தலைவர் ஹமர்தீன், குன்னம் தொகுதி செயலாளர் மைக்கேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் கீர்த்திவாசன் மற்றும் அரவிந்த், தொகுதி செய்தித் தொடர்பாளர் சத்தியசீலன் மற்றும் சிவனேசன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!