Skip to content
Home » பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான விசாரணைக்கு ஐகோர்ட் தடை

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான விசாரணைக்கு ஐகோர்ட் தடை

  • by Senthil

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி பெறாமல் தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்தநிறுவனத்தை செயல்படச் செய்ததாக பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர்.

அந்த மனுவில், அரசின் அனுமதி இல்லாமல் அமைப்பை தொடங்கவில்லை. அரசு துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றிருக்கிறேன். எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் கீழ் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது துணைவேந்தர் ஜெகநாதன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், “ஓய்வு பெற்றபின் லாபமடையும் நோக்கில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டதாக ஊகத்தின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 2013-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, லாப நோக்கில்லாமல், மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனத்தை துவங்கவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவும் அரசும் அனுமதியளித்துள்ளது.

அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், “தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களில் 2013-ல் இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த, தலா 14.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2023-ல் அரசு மற்றும் சிண்டிகேட்டிடம் அனுமதி பெறாமல் பெரியார்  பல்கலைக்கழகத்தின்  பெயரில், பல்கலைக்கழக முகவரியில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. அத்துடன், பல்கலைக்கழகத்தின் 2024 சதுர அடி நிலத்தை எந்த அனுமதியுமில்லாமல் பயன்படுத்தியுள்ளனர். அரசு அனுமதியின்றி ஐடிடிசி என்ற பெயரை PUTER என பெயர் மாற்றம் செய்து, 4 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தங்களில் பணம் பரிமாறப்பட்டதா என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது” என்று விளக்கமளித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வழக்கில் ஜெகநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், “ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க கோரியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதை எதிர்த்த வழக்கு ஜன.19விசாரணைக்கு வருகிறது. அனைத்து ஒப்பந்தங்களும் கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, ஆவணங்களை ஆய்வு செய்வதாக கூறிய நீதிபதி, விசாரணையை இன்றகை்கு ஒத்திவைத்தார்.

இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது  ஜெகநாதன் மீது  விசாரணை நடத்த தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  துணைவேந்தர் செயல்பாட்டில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லைஎன்றும் நீதிபதி குறிப்பிட்டார். தடையை நீக்க வேண்டுமானால் தனி  மனு தாக்கல் செய்யுங்கள் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!