Skip to content
Home » தேர்தல் வெற்றி எதிர்த்த வழக்கு… நிராகரிக்ககோரிய விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி…

தேர்தல் வெற்றி எதிர்த்த வழக்கு… நிராகரிக்ககோரிய விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி…

கடந்த 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலில் தனது வெற்றிக்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி விஜய்பாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!