பாலிமர் பிளாஸ்டிக் தாள்களை கொண்டு ரூ.10 மற்றும் ரூ.20 பாலிமர் நோட்டுகளை அச்சிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, ரூ.200 கோடி மதிப்பிலான நோட்டுகளைச் சோதனை முயற்சியாகச் சந்தையில் வெளியிட ரிசர்வ் வங்கி (RBI) திட்டமிட்டுள்ளது. இந்தச் சோதனை முயற்சி வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், வரும் 2027 ஏப்ரல் மாதத்திற்குள் பிளாஸ்டிக் பணத்தாள்களை முழு அளவில் புழக்கத்திற்குக் கொண்டுவர ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.
