Skip to content
Home » தேசிய அளவிலான விளையாட்டு போட்டி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்…

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17.12.2022 முதல் 22.12.2022 வரை நடைபெற்ற ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையேயான 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ, மாணவியர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் அரியலூர் மாவட்ட இருளர் இன பழங்குடியின மக்களுக்கு முந்திரி சேகரம் செய்து கொள்ளும் உரிமைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,   வனத்துறை அமைச்சர்  மா. மதிவேந்தன்,  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  என்.கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  தென்காசி சு. ஜவஹர்,  பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்  ச.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!