Skip to content
Home » பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..

பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..

  • by Senthil

கர்நாடகாவில் ஹப்பள்ளி நகரில் 2023-ம் ஆண்டுக்கான 26-வது தேசிய இளைஞர் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திறந்த காரில்  சென்றார். வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் பாதுகாப்புக்காக உயரதிகாரிகளும் கூடவே சென்றனர். இந்நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி பேரணியின் நடுவில் இளைஞர் ஒருவர் திடீரென மாலையுடன் பிரதமர் மோடியை நோக்கி பாய்ந்தார். இதனை கவனித்த பாதுகாப்புக்கு உடன் சென்ற அதிகாரிகள் அந்த இளைஞரை தடுத்தனர். எனினும், அவரது மாலையை பிரதமர் மோடி வாங்கி கொண்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த இளைஞரை அப்புறப்படுத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!