Skip to content
Home » கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக நாளை (வெள்ளிக்கிழமை)காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். பின்னர் அவர் அங்கு இருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு சொல்கிறார். கல்லூரி மைதானத்தில் நடக்கும் பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசுகிறார்.

மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக வெளி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கன்னியாகுமரிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.

இந்த வருடத்தில் பிரதமர் மோடி 5வது முறையாக  இன்று தமிழகம்  வருகிறார். இன்னும் 3 முறை வருவார் என பாஜகவட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!