Skip to content
Home » போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் , வேலை அந்த பெண் வேலைபார்த்து வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது அவரைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர், காக்கி பேண்ட் அணிந்துகொண்டு தங்களை போலீசார்போல், காட்டிக்கொண்டு விசாரிக்க வேண்டும் என அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் செல்லும் சாலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு, அந்த பெண்ணை அழைத்துச் சென்று இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலியில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகரில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வடமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ் (31) மற்றும் பிரகாஷ் (31) என்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.  இருவரும் போலீஸ் என்று சொல்லி பல பெண்களை விசாரணைக்கு அழைப்பதாக, கூறி பாலியல் கொடுமை  செய்துள்ளதும் தெரியவந்தது. இருவரும் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்றபொழுது , தப்பியோட முயன்றபோது இருவரையும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ளனர். இதில் நாகராஜுக்கு துப்பாக்கி பாய்ந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தப்பிக்கும் முயற்சி செய்யும்போது போலீசாரை தாக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது போலீசார் வானத்தை நோக்கி 2 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்தும் தப்பி ஓட முயற்சி செய்ததால், வேறு வழியின்றி 1 ரவுண்டு காலில் சுட்டு பிடித்தனர். உடன் இருந்த பிரகாஷ் தப்பிக்கும் பொழுது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது . பாதிக்கப்பட்ட இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, வாக்கிடாக்கி, லத்தி, இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், நம்பர் பிளேட் கட்டர், மிளகாய்பொடி, சாவி, ரிவால்வர் ரவுண்ட்ஸ், ராடு, கையுறை மற்றும் முகமூடி ஆகியவை கைப்பற்றப்பட்டது. இவரும் போலீஸ் எனக்கூறி வாக்கி டாக்கியை வைத்து மிரட்டி 15க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!