Skip to content
Home » அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு ஒத்திகை..

அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு ஒத்திகை..

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி 27.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகளத்தூர் முதல் பொன்பரப்பி வரையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை இன்று (17.04.2024) நடைபெற்றது.

இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி தங்கள் வாக்கு செலுத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆண்டிமடம் வட்டம் மற்றும் செந்துறை வட்டங்களில்

காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இன்றையதினம் செந்துறை வட்டத்தில், சிறுகளத்தூர் முதல் பொன்பரப்பி வரை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் வந்த காவல்துறையினர் மக்களிடத்தில் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன், அந்தோணி ஆரி, அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!