Skip to content
Home » காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலைய சரகம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியில் காவல் துறைத் தலைவர் சாமுண்டீஸ்வரி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் வழிகாட்டுதல்படியும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் காவலர் மஞ்சித் ஆகியோர்களால், நெல்லியாண்டவர் கல்லூரியில் சுமார் 500 மாணவர்களுக்கு சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதிகள் பற்றியும்,தீயசெயல்பாடுகள், குழந்தை திருமணம் பற்றியும், போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் பற்றியும், மேலும்

இந்திய குடிமைப்பணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலக நலதிட்டம் மற்றும் சட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான புத்தகங்கள் வழங்கியும், மாவட்ட அளவில் மாஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் மாணவியர்களுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த சமத்துவம் மற்றும் சமூக நீதி என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது அதில் வெற்றி பெற்ற 14 மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் விஜயபாஸ்கர் மற்றும் நேஷனல் கல்விக் குழுமங்களின் தலைவர் சிலம்பரசன், நேஷனல் கல்வி குழுமங்களின் செயலாளர் சங்கரநாராயணன், கல்லூரி நிர்வாக இயக்குனர் மனோபாலன், கல்லூரி முதல்வர் டாக்டர்.கண்ணன், இணை இயக்குனர் அமிர்தேவ் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!