Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46).இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியில் ஒரு குற்ற வழக்கில் கைதாகி கடந்த 2022ம் ஆண்டு நவ 24ந்தேதியில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் காச நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை நவ.1ந்தேதி சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!