Skip to content
Home » கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை(18ம் தேதி) பிரதமர் மோடி கோவை வந்து  பாஜகவுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதுவரை 5 முறை தமிழகம் வந்தபோதும் பொதுக்கூட்டடங்கள், அரசு விழாக்களில் பேசினார். ஆனால் கோவையில் வீதி வீதியாக சென்று ரோடு ஷோ மூலம் வாக்கு திரட்டு திட்டமிட்டு உள்ளார். இதற்காக பாஜக  முக்கியமான வீதிகளில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டு அதற்காக போலீசாரிடம் விண்ணப்பித்தனர். இது தொடர்பாக பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று  கோவை மாநகர போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.

பாஜகவினர் கேட்டுள்ள  வீதிகள் போக்குவரத்து நிறைந்த முக்கியமான பகுதி ,எனவே அந்த பாதை வேண்டாம். மாற்றுப்பாதையில்  ஏற்பாடு செய்யும்படி போலீசார் தெரிவித்தனர். ஆனால் பாஜக நிர்வாகிகள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பாஜகவினர் கேட்டுள்ள வீதிகளில்  அனுமதி தரமுடியாது என மாநகர போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார். எனவே கோர்ட் மூலம் அனுமதி பெற பாஜகவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!