Skip to content
Home » விதி மீறி பிரசாரம்…. அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு

விதி மீறி பிரசாரம்…. அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு

  • by Senthil

கோவை தொகுதி  பாஜக வேட்பாளர்  அண்ணாமலை நேற்று  கோவையில்  இரவு 10.40 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் விதிப்படி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது.  விதியை மீறி பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ததை அறிந்த திமுக  நிர்வாகிகள்  அங்கு சென்று ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டு உள்ளனர். அப்போது திமுக, மற்றும் கம்யூ. தொண்டர்களை பாஜகவினர் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த திமுக, கம்யூ. நிர்வாகிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது  தொடர்பாக  பீளமேடு போலீசார்  அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!