சேரி மொழி என தலித் மக்களின் மொழியை தீண்டத்தகாத மொழியாக இழிவுபடுத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நடிகையுமான குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கார்த்திக் புகார் கொடுத்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு, ‘திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்திருந்தார் குஷ்பு. இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 6 போலீசார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் மிரட்டல் வருவதாக கூறிய நிலையில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.