பஞ்சாபில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பகிர்ந்த வீடியோ ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது என பஞ்சாப் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அந்த வீடியோவில் 2 ஆண்கள் ஜாம்பி போன்று அசைவின்றி நிற்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை பஞ்சாபில் போதைப்பொருள் பாதிப்பு என ஹர்பஜன் சிங் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். சமூக ஊடகங்களில் தகவல்களை பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
