Skip to content
Home » பொள்ளாச்சியில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி..

பொள்ளாச்சியில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Senthil

தமிழகம் முழுவதும் மின்சாரம் சிக்கனம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர் பேரணி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொது மக்களுக்கு மின்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதையடுத்து கோவை, பொள்ளாச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் செயற்பொறியாளர் ராஜா தலைமையில் பல்லடம் சாலை முதல் காந்தி சிலை வரை மின் சிக்கனம் குறித்தும் வீடு மற்றும் வர்த்தக மின் நுகர்வோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்,தொழிற்சாலை மின் நுகர்வோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விவசாயம் மின் நுகர்வோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுவங்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கி பேரணி நடைபெற்றது,இதில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மின்சார ஊழியர்கள், அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!