Skip to content
Home » பொள்ளாச்சி…. பாஜக வேட்பாளர் மீனவர்களிடம் வாக்கு சேகரிப்பு

பொள்ளாச்சி…. பாஜக வேட்பாளர் மீனவர்களிடம் வாக்கு சேகரிப்பு

  • by Senthil

கோவை தெற்கு மாவட்ட  பாஜக பொறுப்பாளர் வசந்த ராஜன் பாஜக வேட்பாளராக  போட்டியிடுகிறார்,ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்று படுக்கையில்  மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் குடும்பம் கோவை மாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்டோர் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் சில குறிப்பிட்ட இடத்தில் முறையான அனுமதி பெற்று மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் வலை மர்ம நபர்களால் அறுக்கப்பட்டு மீன்கள் திருடப்படுகிறது .இது குறித்து மீனவர்கள் பலமுறை காவல் துறையிடம் புகார்அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை திராவிட கட்சிகள் பிரமுகர்களிடம் மனுஅழுத்தம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நீங்கள் வேட்பாளராக உள்ளதால் எங்கள் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனகோரிக்கை வைத்தனர்,பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் மீனவரிடம் கூறுகையில் மத்திய அரசு மீனவர்களுக்கு எல்லா சலுகைகளும் குறிப்பாக படகு வலை மற்றும் பல சலுகைகள் அளித்து வருகிறது. மேலும் நான் வெற்றி பெற்றவுடன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என மீனவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!