Skip to content
Home » பொள்ளாச்சி…..57ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி …..முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

பொள்ளாச்சி…..57ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி …..முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 9.30 மணிக்கு  விமானம் மூலம் கோவை வருகிறார்.  விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அங்கிருந்து  கார் மூலம்  பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் நலத்திதிட்ட உதவிகள் வழங்கும் விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்துகிறார்.

கோவை  விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காலை 10.45 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேட்டைக்கு மு.க.ஸ்டாலின் வருகிறார், இந்த விழாவில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 509 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதேபோல், 416 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!