Skip to content
Home » 38 அதிநவின கேமராக்கள்… பொள்ளாச்சி எம்பி சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்..

38 அதிநவின கேமராக்கள்… பொள்ளாச்சி எம்பி சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்..

  • by Senthil

தமிழகத்திலேயே புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதம் தோறும் அமாவாசை மற்றும் விழா காலங்களில் சுமார் 5 லட்சத்துக்கு அதிகமானோர் வந்து செல்லும் நிலை உள்ளது  இங்குள்ள பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காகவும் பொதுமக்களின் தேவைக்காகவும் கோவை,  பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து சுமார் 27 லட்ச ரூபாய் மதிப்பில் 38 அதிநவீன கேமராக்கள் பொருத்தம் பணி நடைபெற்று வந்தது. இதை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்கம் தலைமை தாங்கினார் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் அதிநவீன கேமராக்களை துவக்கி வைத்தார். இதில் வால்பாறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி ஆனைமலை திமுக நகர செயலாளர் டாக்டர் செந்தில் துணை தலைவர் ஜாபர் சேட் , சிங்காரம் மற்றும் காவல் ஆய்வாளர் குமார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!