தமிழர் திருநாளான தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி,மார்க்கெட் டில் உள்ள ரேசன் கடையில் முன்னாள் நகர தி.மு.க.செயலாளர்
க.நைனாமுகம்மது, கவுன்சிலர் செந்தாமரை பாலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் வட்டசெயலாளர் ஆசிப்,வட்டபிரதிநிதிகள் சுப்பு,சேகர், கழக செயல்வீரர்கள் சதாம்உசேன்,அரிசிக்கடை சரவணன் உள்ளிட்ட கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.