Skip to content
Home » பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU பணியாளர்கள் போராட்டம்..

பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU பணியாளர்கள் போராட்டம்..

  • by Senthil

திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் உள்ள வேலைகளை செய்வதற்கு அவுட்சோர்சிங் மூலமாக தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டது. இந்த முடிவினை ரயில்வே நிர்வாகம் கைவிடவேண்டுமென வலியுறுத்தி,அங்கு பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் இன்று காலை திடீரென பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.ஆர்.எம்.யு. துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர்கள் நுழைவு வாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
அப்போது தனியார் மையம் முடிவை கைவிட வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வீரசேகரன் கூறும்போது, ரயில்வேயில் அவுட்டோர் சிம் முறையை கையாளும்போது அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான எஸ் ஆர் எம் யு உடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் சர் பிலஸ் சரண்டர் செய்து திருச்சி ரயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் நூறு ஒப்பந்த பணியாளர்களை ஒரே நேரத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த முடிவை கைவிடாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!