Skip to content
Home » வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

கோவை, பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவை சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு செவ்வாய் மாலை திடீரென தலையில் ரத்த காயத்துடன் உடல் முழுவதும் ரத்தக்கரை படிந்த நிலையில் அரை நிர்வானத்துடன் வந்த போதை ஆசாமி சாலை நடுவே நின்று கொண்டு வாகனங்களை வழிமறித்தும் வாகன ஓட்டிகளுக்கும் மிரட்டல் விடுத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.  இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த போதை ஆசாமி அங்கிருந்து நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தார் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை

வெளியில் செல்லுமாறு கூறினார்கள் . ஆனால் அந்த போதை ஆசாமி ஊழியர்களை மிரட்டி நான் நீதிபதி அம்மாவை பார்க்க வேண்டும் வெளியில் வரச் சொல்லுங்கள் என்று மிரட்டும் தோனியில் கத்தினார் ஊழியர்கள் எடுத்துக் கூறியும் வெளியே செல்ல மறுத்த போதை ஆசாமி ரகளைஈடுபட்டார்.  அங்கு வந்த காவல் துறையினருக்கும் மிரட்டல் விடுத்தார் ஒரு வழியாக போதை ஆசாமியில் கைகளைப் பிடித்து இழுத்து வெளியில் அழைத்து வந்ததால் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். உடல் முழுவதும் ரத்த கரையுடன் போதை ஆசாமி செய்த அட்ராசிட்டியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விசாரணை போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி வயது 22 என்பதும் தனக்குத்தானே பாட்டிலால் தலையை காயத்தை ஏற்படுத்தியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகமாக மது அருந்தி உள்ளதால் விசாரணை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!