Skip to content
Home » காங்கிரசுக்கு 100 கூட கிடைக்காதாம்.. பிரசாந்த் கிஷோர் கணிப்பு..

காங்கிரசுக்கு 100 கூட கிடைக்காதாம்.. பிரசாந்த் கிஷோர் கணிப்பு..

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்.. பா.ஜ., 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். இதில் பா.ஜ., 240 முதல் 260 தொகுதிகளிலும் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியானது 35 முதல் 45 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார் என கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும் என்கிற கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட கூடுதலாக வெற்றி பெறுவார்களா என்பது குறித்து எந்த வித யோசனையும் எனக்கு இல்லை. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் இந்த தேர்தலில் 65, 68, 72 அல்லது 55 தொகுதிகளில் வெற்றி பெறுவார்களா? என்பது எனக்கு தேவையற்ற விஷயம். 55 தொகுதிகளில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பது என்பது பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்? அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடாது என்பது எல்லோருக்கும் தெரியும் எனவும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!