தஞ்சாவூர் அருகே முன்விரோதம் காரணமாக தனது பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே பர்மா காலனி கலைஞர் நகர் முதல் தெருவை சேர்ந்த வேல்மாறன் என்பவரின் மகன் பாண்டியன் (53). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் தமிழரசன் (25). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி விழா விளார் ரோடு பர்மா காலனி பகுதியில் பாண்டியனை பார்த்த தமிழரசன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பாண்டியன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
