தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஞ்சனூர் சீதளா மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் பூசாரியாக வேலை பார்த்தவர் துகிலியைச்சேர்ந்த முத்துராயர் மகன் லெட்சுமணன் (வயது 38). ஊர் பொதுக்கோயிலான சீதாள மாரியம்மன் கோயிலில் கிராமவாசிகளால் பூசாரியாக நியமிக்கப்பட்டார். அவர் பூசாரியாக பொறுப்பேற்ற போது பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்திய நகைகளையும் பொறுப்பில் ஒப்படைத்தனர்.
அம்மனுக்கு அலங்காரம் செய்ய பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை கிராமவாசிகள் கேட்ட போது பீரோ சாவியை காணவில்லை என்று கூறினார்.
ஊர் பொதுமக்கள் கள், பூசாரி லெட்சுமணன் முன்னிலையில் பீரோ உடைத்த போது அதிலிருந்த அம்மன் நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கிராமவாசிகள் ஊர் தலைவர் வேல்வேந்தன் தலைமையில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் அசோக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பூசாரி லெட்சுமணன் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை திருடியது தெரியவந்தது. பூசாரி லெட்சுமணனை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.