Skip to content
Home » புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்

புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்

  • by Senthil

புதுகை கலெக்டர் அலுவலகம் அருகே பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு இன்று மதியம்  அமோனியம் வாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால்  அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு  கண் எரிச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வாயு பரவ விடாமல் நீரை பீய்ச்சி அடித்தனர். கசிவு ஏற்பட்ட இடத்தில் சரி செய்யும் பணியும் நடக்கிறது.

அமோனியம் வாயு கசிவினால் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கண் எரிச்சல் மட்டும்  இருக்கும். ஈரத்துணியை கட்டினால் கண் எரிச்சல் கட்டுப்படும் என  ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!