Skip to content
Home » புதுகையில் பெண்களுடன் நாற்று நட்டபடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா…

புதுகையில் பெண்களுடன் நாற்று நட்டபடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா…

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு

வருகிறார். வேட்பாளர் கருப்பையாவிற்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று , வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை மாவட்டம் நடுப்பட்டு அருகிலுள்ள பருக்கைவிடுதியில் வயலில் இறங்கி நாற்றுகளை நட்டு அங்கு வேலை செய்யும் பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது அப்பகுதி மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!