Skip to content
Home » புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சி, கேசராப்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, புதிய அங்காடி கட்டிடம், மற்றும் பள்ளி கட்டிடத்தினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (24.11.2023) திறந்து வைத்தார்.  குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப் பொருட்களை வழங்கினார். உடன் இலுப்பூர் வருவாய்

கோட்டாட்சியர் தெய்வநாயகி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர்  சுதா அடைக்கலமணி, அறந்தாங்கி சரக துணைப் பதிவாளர் ஆறுமுக பெருமாள், பொன்னமராவதி கள அலுவலர்  அன்னலட்சுமி, ஊராட்சிமன்றத் தலைவர் செல்வி முருகேசன்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!