Skip to content
Home » புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம். மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர ரேசன் கடையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். உடன் அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், உள்ளாட்சி அமைச்சு பிரிதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் திருமயம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சட்டம், நீதிமன்ற்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று கடனுதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்

அலுவலர் செல்வி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம். ஊராட்சிமன்றத் தலைவர் சிக்கந்தர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!