Skip to content

புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள்   மற்றும் சிறை நிரப்பும்  மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தங்கவேலு தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சண்முகம், மாவட்டச் செயலாளர் எம்.கணேசன், நகரச் செயலாளர் வி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!