Skip to content
Home » புஷ்பா2’ படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு வெளியானது

புஷ்பா2’ படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு வெளியானது

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. ரிலீஸுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளை இப்போதிருந்தே படக்குழு தொடங்கியுள்ளது. ஓடிடி உரிமம், டிஜிட்டல் ரைட்ஸ் என படம் வெளியாவதற்கு முன்பே ‘புஷ்பா2’ லாபம் பார்த்துவிட்டது என்கின்றனர்.

கடந்த 2021ல் வெளியான ‘புஷ்பா1’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ‘ஊம் சொல்றியா மாமா’, ‘ஸ்ரீவள்ளி’ என அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களைக் கவர்ந்தது. நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவருக்குமே ‘புஷ்பா1’ படத்திற்காக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்தநாளின் போது வெளியான ‘புஷ்பா2’ டிரெய்லரும் மாஸ் காட்டியது. இப்போது படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாவது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘புஷ்பா புஷ்பா… புஷ்பாராஜ்’ என்ற முதல் சிங்கிள் வரும் மே 1 அன்று காலை 11.07 மணிக்கு வெளியிரப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
video

இதற்கான புரமோவும் தற்போது வெளியாகியுள்ளது. பாடலின் தீவிரத்தைக் கேட்ட ரசிகர்கள், ‘தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு அடுத்த அவார்ட் ரெடி…’ என உற்சாகமாக சொல்லி வருகின்றனர். இந்தப் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். சமந்தாவுக்கு பதிலாக ஸ்ரீலீலா ஸ்பெஷல் டான் இந்தப் பாகத்தில் நடனம் ஆடுவார் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!