Skip to content
Home » அமிர்தசரஸ் பொற்கோவிலில்….. ராகுல் காந்தி சேவை

அமிர்தசரஸ் பொற்கோவிலில்….. ராகுல் காந்தி சேவை

  • by Senthil

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி எம்.பி.  2 நாள் பயணமாக  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்றார். நேற்று அவர்  சீக்கியர்களின் புனித தலமாக பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார்.அதனை தொடர்ந்து அங்குள்ள உணவுக் கூடத்தில் பக்தர்கள் உபயோகித்த தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார்.

இரண்டாவது நாளாக இன்று பொற்கோவிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து பல்லக்குத் தூக்கும் நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்தார். இது ராகுல் காந்தியின் தனிப்பட்ட பயணம் என்பதால் அவரை சந்திக்க பிற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!