Skip to content
Home » பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தினத்தையொட்டி  கிராமசபை க்கூட்டம் தலைவர் கேஆர்.முருகேசன் தலைமையில்நடந்தது. தீர்மானங்களை ஊராட்சி தலைவர் படித்தார். துணைத்தலைவர் சி.அண்ணாமலை,பற்றாளர் செ.கற்பகவள்ளிமுன்னிலை  வகித்தனர்.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துடன் ,சிறப்பாகசெயல்பட்ட தூய்மைபணியாளர்
கள்,சுய உதவிக்குழுவினர்களுக்கு பாராட்டுதெரிவிக்கப்பட்டது.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை

நடவடிக்கை மேற்கொள்ளவும், இணையவழி வீட்டுவரி, சொத்துவரியை செலுத்த
வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி உறுப்பினர்கள்பா.மல்லிகா, சா.அஜ்மல்கான்,செ.அன்னக்கிளி,செ.செல்வப்பிரியா,நை.பாத்திமா கனி, பி.அபிநயா, க.ராஜபாண்டியன்,மு.உதயக்குமார், விஏஒ.அம்பிகா, உதவியாளர் பழனியப்பன், சீகம்பட்டி பள்ளிதலைமைஆசிரியர் சகாயசெல்வி, பட்டதாரி ஆசிரியை காந்திமதி பங்கேற்றனர்.
நிறைவாக ஊராட்சி செயலர் செல்வம் நன்றி கூறினார்.

அரிமழம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி உள்ளாட்சி தின கிராமசபைக்கூட்டம்
ஊராட்சிமன்ற தலைவர் மா.கண்ணன் தலைமையில் தாஞ்சூரில் நடந்தது.துணைத்தலைவர் இலக்கியா முத்துக்குமார் முன்னிலைவகித்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!