Skip to content
Home » ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

  • by Senthil

ல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கனா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கனாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியை பிடித்தது. ஏனைய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த சூழலில் ராஜஸ்தானில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் கடந்த பின்னரும் இன்னமும் முதல்-மந்திரி யார்? என்று பா.ஜனதா அறிவிக்காமல் உள்ளது. இதற்கிடையே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முதல்வர்  தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளார்கள். இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், சரோஜ் பாண்டே, வினோத் தாவ்டே ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயம் மத்திய மந்திரிகள் அர்ஜூன்ராம் மேக்வால், கஜேந்திரசிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் முதல்வர்  தேர்வு பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் பதவி தனக்கு தந்தே தீரவேண்டும் என்பதில்  வசுந்தரா ராஜே சிந்தியா  உறுதியா உள்ளார்.  அங்கு அவரை தவிர்த்தால் வரும் மக்களவை தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என பாஜக மேலிடம் கருதுகிறது. அதே நேரத்தில் வசுந்தரா ராஜே முதல்வராக வருவதை  உள்துறை அமைச்சர் அமித்ஷா விரும்பவில்லை என்றும் தகவல்கள் கூறுகிறது. அதே நேரத்தில் எம்.எல்.ஏக்கள் ஆதரவும் வசுந்தராவுக்கே அதிகம் இருப்பதாக தெரிகிறது. எனவே  அவரை தவிர்க்க முடியாத நிலையில்  டில்லி தலைமை  அதிர்ச்சியில் உள்ளது.

மத்திய பிரதேச முதல்வராக  மோகன் யாதவ் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.  அங்கு ஏற்கனவே 4 முறை முதல்வராக இருந்த   சிவராஜ் சிங் சவுகான் இந்த முறை முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை.  இதனால் அவரும், அவரது ஆதரவாளர்களும்  வருத்தத்தில் உள்ளனர்.   இதனை சமாளிக்க அவரை மத்திய அமைச்சராக்கலாம் என தெரிகிறது. அதே நேரத்தில்  சவுகானும், அவரது ஆதரவாளர்களும் மேலிடத்தில் தங்கள் கோபத்தை தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளனர்.  தற்போதைய முதல்வர் மோகன் யாதவ்,  சவுகான் அமைச்சரவையில்   உயர் கல்வித்துைற அமைச்சராக இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!