Skip to content
Home » ‘கூலி’ படக்குழுவை கதறவிட்ட இளையராஜா… ஜகா வாங்கிய ரஜினி…

‘கூலி’ படக்குழுவை கதறவிட்ட இளையராஜா… ஜகா வாங்கிய ரஜினி…

பாடல்களுக்கான உரிமம் பெறுவது தொடர்பான வழக்கில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் நடிகர் ரஜினியின் புதிய படமான ‘கூலி’யின் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. இதில் அவரின் இரண்டு பழைய பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

ரஜினி - இளையராஜா
‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்ற ‘சம்போ சிவ சம்போ’ பாடலின் வரிகளும், ‘தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ எனும் பாடலின் இசை பின்னணியும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதற்காக ‘கூலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு, தனது பாடலுக்கு முறையான உரிமம் பெற வேண்டும் அல்லது ’கூலி’ படத்தின் டீசரில் இருந்து அவற்றை நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா.
இந்த நிலையில், ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ‘கூலி’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி” என்றார். அடுத்ததாக, இளையராஜா தொடர்ந்துள்ள காப்பி ரைட்ஸ் வழக்கு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, ”அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்சினை. அடுத்து வரவிருக்கும் ’வேட்டையன்’ படம் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது” என்றார். நேற்று ரஜினி- அமிதாப் 2பேரும் கோட் சூட் அணிந்து ஸ்டைலிஷாக இருக்கும்படியான போட்டோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!