Skip to content
Home » ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 445 ரன்களுக்கு ஆல்  அவுட் ஆனது. கேப்டன் ரோகித் 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் , அறிமுக வீரர் சர்ப்ராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து நேற்று  இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்துஅணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை எடுத்தது. பென் டக்கெட் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று  காலை  தொடங்கியது.இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார். இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் இந்தியா 126ரன்கள் கூடுதல் பெற்றுள்ள நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. ரோகித், ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.  ரோகித்19   ரன்னில் அவுட் ஆனார். அவருக்கு பதில் கில் இறங்கினார்.  ஜெய்ஸ்வால் 13,  கில் 5 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!