தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இன்று நெல்லை பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அவர் டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். நெல்லை கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், விருதுநகர் தொகுதிகளின் இந்தி்யா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பேசுகிறார்.
நெல்லை கூட்டம் முடிந்ததும் ராகுல் ஹெலிகாப்டரில் கோவை சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பேசுகிறார்கள். இதையொட்டி இன்று கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இன்று மதியமே திமுக கூட்டணி் தொண்டர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.