Skip to content
Home » அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

  • by Senthil

மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் (எ)ராமகிருஷ்ணன்,   இவர் கடந்த 2012ம் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர் மீதான  வழக்கு கரூர் கோர்ட்டில் நடந்து வந்தது.  இந்த வழக்கு விசாரணைக்காக   ராமகிருஷ்ணனும், அவரது நண்பரும்,  அந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவருமான கார்த்திக்  என்பவரும் கடந்த வாரம்  பைக்கில் கரூர் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மதுரை திரும்பிக்கொண்டிருந்தனர்.

அரவக்குறிச்சி அருகே  சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த சிலர்   பைக் மீது மோதியது. இதில்  ராமர் கீழே விழுந்தார். உடனடியாக அவரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். கார்த்திக் படுகாயங்களுடன் தப்பினார். அரவக்குறிச்சி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை செய்யப்பட்ட ராமர் உடல் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என ராமர் உறவினர்கள் கூறினர். இந்த நிலையில் குற்றவாளிகள்  கோர்ட்டில் சரண் அடைந்து விட்டதால் இன்று  உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.  உடலை மதுரைக்கு கொண்டு சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!