Skip to content
Home » ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

  • by Senthil

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக வேலை நிறுத்தம் நடக்கிறது.

இந்த நிலையில்,  இன்று ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.  இந்த பேரணியில் பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி பேரணியாக  சென்று தங்களது அரசு அடையாள அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கமீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.. மீனவர்கள் போராட்டம் காரணமாக முக்கிய பகுதிகளில் ஏராளமான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!