Skip to content
Home » பெங்களூர் ’ராமேஸ்வரம் கஃபே’ யில் குண்டு வெடிப்பு.. பயங்கரவாதிகள் சதி..?

பெங்களூர் ’ராமேஸ்வரம் கஃபே’ யில் குண்டு வெடிப்பு.. பயங்கரவாதிகள் சதி..?

  • by Senthil

பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும்ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ(25) ஆகியோரும் 7 வாடிக்கையாளர்களும் படுகாயம் அடைந்தனர். வாடிக்கையாளர்களில் 2 பேர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் ஆவர்.காயமடைந்த 9 பேரும் ஒயிட்ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கர்நாடக போலீஸ் டிஜிபி அலோக் மோகன், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து தடயவியல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு படை அதிகாரிகள் ஆகியோரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் சிதறிக் கிடந்த வெடிப்பொருட்கள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். அங்கு சிதறிக் கிடந்த தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “சிசிடிவி கேமராவில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பையை சாப்பிடும் மேஜைக்கு அடியில் விட்டுச் சென்றது பதிவாகியுள்ளது. கஃபேவில் வெடித்த குண்டு கடந்தஆண்டு மங்களூருவில் வெடித்த குண்டைப் போல சக்தி குறைவானது. இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களை அனுமதிக்க முடியாது. இந்த சதிச் செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து தண்டிப்போம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!