Skip to content
Home » என்சிபி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்…. டைரக்டர் அமீர் பேட்டி

என்சிபி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்…. டைரக்டர் அமீர் பேட்டி

  • by Senthil

ரம்ஜான் மாதம், முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படிசென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஷவ்வால் மாத பிறை நேற்று தெரியவில்லை. எனவே நாளை (வியாழக்கிழமை) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத்முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஈதுல் பித்ர் (ரம்ஜான் பண்டிகை) நாளை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு தொழுகை செய்தார். இதனைத்தொடர்ந்து இஸ்லாமியபெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சினிமா இயக்குனர் அமீரின் வீடு உள்பட 14 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

தொழுகை முடிந்து வந்த டைரக்டர் அமீரை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:  போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி)விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்திருக்கிறேன். விசாரணையை சந்திக்க  முழுவதும்தயாராக இருக்கிறேன். ஜாபருடன் தொடர்பில் இருந்ததால் என்னை விசாரிக்கிறார்கள்.   நான் எந்த தப்பும் செய்யவில்லை. என்னை குற்றவாளியாக்கும் விதத்தில் சமூகவலைதளங்களில் பேசப்படுவதை ஏற்கமுடியாது.  விசாரணை நடத்துவதில் அரசியல் உள்ளதா என இப்போது சொல்ல முடியாது.நான்  எங்கும் ஓடி ஒளியவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!