தமிழகத்தில் இன்று ரம்ஜான் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள் ,இன்று காலையிலேயே புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.ஈத்கா மைதானங்களிலும் நடந்த சிறப்பு தொழுகையில் பல்லாயிரணக்காண இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி, சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி தஞ்சை, கரூர் பள்ளப்பட்டி,
அரவக்குறிச்சி, அரியலூர் உள்பட அனைத்து இடங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோல டெல்லி உள்பட இந்தியாவின் பிற இடங்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மசூதிகளில் கூடி கூட்டாக தொழுகை நடத்தினர்.