Skip to content
Home » சாலை விபத்து…. கரூர் நகராட்சி மோட்டார் ஆபரேட்டர் பலி…

சாலை விபத்து…. கரூர் நகராட்சி மோட்டார் ஆபரேட்டர் பலி…

  • by Senthil

கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சியில் மோட்டார் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் தங்கவேல்(58) என்பவர் நாமக்கல் மாவட்டம் மேல் சாத்தம்பூரில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து இன்று காலை வேலைக்கு வந்து கொண்டிருந்தபோது நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுப்பாளையம் காவேரி ஆற்று பாலம் அருகில் வந்துகொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்

இறந்தவரின் உடலை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!