தமிழகத்தில் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி மரங்கள் வளரும் நிலையில் உள்ளதாக தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி நகர, பேரூராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளும் குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளதாகவும், நெடுஞ்சாலைத்துறை உடனடியாக தலையிட்டு அனைத்து சாலைகளையும் தரம் உயர்த்தி மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
