திருச்சி மணிகண்டம் எஸ்.ஐ. மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓலையூரில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாகவும், அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தது. எனவே போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. சிலா் டூவீலரிலும் தப்பினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.
அவர்களிடம் அரிவாள், இரும்பு கம்பி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் ெகாண்டு வந்து விசாரித்தனா். விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டு அங்கு பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.
அவர்களது பெயர் விவரம் வருமாறு: ஓலையூரைச் சேர்ந்த ஜெய்சங்கர், குழந்தைராஜ், திருமலை சமுத்திரம் ராஜா என்ற லோகநாதன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வீரன், வினோத்.
போலீசாரிடம் சிக்காமல் இருந்து இருந்தால் அன்று இரவு பெரிய அளவில் வழிப்பறி மற்றும் கொள்ளை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும், சரியான நேரத்தில் போலீசார் அவர்களை ஸ்கெச் போட்டு பிடித்து விட்டதால் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.