Skip to content
Home » நாக்பூர் டெஸ்ட்… ரோகித் சர்மா சதம்…,இந்தியா ரன் குவிப்பு

நாக்பூர் டெஸ்ட்… ரோகித் சர்மா சதம்…,இந்தியா ரன் குவிப்பு

  • by Senthil

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177  ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா  ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து நிலைத்து ஆடிய  இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோகித் சர்மா  இன்று சதம் விளாசினார். 171 பந்துகளில் ரோகித் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்களில் வெளியேறினார்.  ஆட்ட நேர இறுதியில்  இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.  ஜடேஜா 66ரன்களுடனும்,  அக்சர்பட்டேல்52ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்தியா தொடர்ந்து நாளையும் பேட்டிங் செய்யும். இன்றைய ஆட்ட நேர முடிவு நிலவரப்படி இந்தியா  144 ரன்கள் அதிகம் எடுத்து உள்ளது.

ஆஸ்திரேலிய அறிமுக வீரர்  மர்பி தனது முதல் ஆட்டத்திலேயே இந்தியாவின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.  அஸ்வின்,  கோலி, புஜாரா, ராகுல், பரத் ஆகிய விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

இந்திய கேப்டன் ரோகித் இன்று அடித்த  சதம் மூலம்  புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது கேப்டனாக டெஸ்ட் ,ஒரு நாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.

மேலும் . சர்வதேச அளவில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்: தில்சன் (இலங்கை) ,பாப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா), பாபர் அசாம் (பாகிஸ்தான்) ,ரோகித் சர்மா (இந்தியா).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!