Skip to content
Home » தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

  • by Senthil

தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்.19ம் தேதி கமாலுதீன் இறந்து விட்டார். தொடர்ந்து அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதார் அப்துல் கனி ஆகியோரிடம், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தனர். தொடர்ந்து போலீசார் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த மனுக்கள் திருச்சி மாவட்ட பொருளாதார குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு விசாரணையில், சுமார் 6,131 பேரிடம், சுமார் 410 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார், கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்த 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கமாலுதீன் சகோதரர் அப்துல்கனி (54) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!