Skip to content
Home » உலக கோப்பை தொடரில் 50 சிக்சர் விளாசி ரோகித் சாதனை

உலக கோப்பை தொடரில் 50 சிக்சர் விளாசி ரோகித் சாதனை

  • by Senthil

உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப்போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று  மோதுகிறது. இந்த போட்டியில்  இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  இதில் ரோகித் 47 ரன்களில் அவுடன் ஆனார். அதில் 4 சிக்சர்கள் விளாசி இருந்தார். இதையும் சேர்த்து ரோகித் உலக கோப்பை தொடரில் 50 சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் மேற்கு இந்திய தீவு வீரர் கிறிஸ் கெயில் 49 சிக்சர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதை இன்று ரோகித் முறியடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!