Skip to content
Home » முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

  • by Senthil

பெரம்பலூர் மதரஸா சாலையைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் செல்வா (எ) நீலகண்டன் (26). ரவுடியான  இவருக்கும், பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் விஜய் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் தனது நண்பர்களான ரோவர் ஆர்ச் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் தீபக் (29), ரெங்கராஜ் மகன் வினோத் (28), குரும்பலூரைச் சேர்ந்த முருகன் மகன் அஜித் (26), வெள்ளையன் மகன் ரமேஷ் (38), அனுக்கூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் கதிர் (26) ஆகியோருடன், பாரதிதாசன் நகரிலுள்ள மளிகைக் கடை அருகே நேற்று முன்தினம் இரவு மது அருந்திக்கொண்டிருந்தனராம்.

அப்போது மது போதையிலிருந்த விஜய் செல்போன் மூலம் நீலகண்டனை தொடர்புகொண்டு வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட

தகராறில் ஆத்திரமடைந்த விஜய் மற்றும் தீபக் ஆகியோர் மது போதையிலிருந்த நீலகண்டனை தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நீலகண்டன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நீலகண்டன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் 6 பேர் மீது வழக்குப் பதிந்து, தீபக், அஜித் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இவ் வழக்கில் தலைமறைவாக உள்ள விஜய், ரமேஷ், வினோத், கதிர்  ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!